நன்னூல்-எழுத்ததிகாரம்-எழுத்தியல்-எழுத்திலக்ககணத்தின் பகுதி
"எண், பெயிர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை
முதல், ஈறு, இடைநிலை, போலி, என்றா
பதம், புணர்பு எனப்பன் னிருபாற் றதுவே."
எழுத்தின் எண்ணும் (எண்ணிக்கையும்) பெயரும் முறையும் பிறப்பும் வடிவமும் மாத்திரையும் முதல்நிலையும் கடைநிலையும் இடைநிலையும் போலியும் பதமும் புணர்ச்சியும் எனப் பன்னிரண்டு வகையினை உடையது எழுத்திலக்ககணம்.